தென் கொரியப் பள்ளிகளில் காபி விற்பனை செய்யப்படுவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, அந்த நாட்டுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது காபி தேவைக்கு புதிய வழிமுறைகளைத் தேட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தென் கொரியாவில் மாணவர்களுக்கு அதிக அளவில் காஃபைன் கொண்ட காபி விற்பனை செய்யப்படுவதற்கு ஏற்கெனவே கடந்த 2013-ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது. தானியங்கி காபி இயந்திரங்களில் ஆசிரியர்கள் பயன்படுக்காக மட்டும் அந்த வகை காபி இதுவரை கிடைத்து வந்தது. எனினும், அதனை மாணவர்களும் வாங்கிப் பருகி வந்தனர். எனவே, மாணவர்களுக்கு அதிக காஃபைன் கொண்ட காபி கிடைப்பதற்கான வாய்ப்பைத் தவிர்ப்பதற்காக, அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் அந்த வகை காபியை பள்ளிகளில் விற்பனை செய்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.