ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்: உலக சுகாதார அமைப்பு

பல்வேறு பிரச்னைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பல்வேறு பிரச்னைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக 15 - 29 வயதுள்ளவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக தற்கொலைத் தடுப்பு நாளை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பும், கனடாவின் மன நல ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

வறுமை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில்தான் அதிகளவில் தற்கொலைகள் நிகழ்வதாகவும், 2016ம் ஆண்டு அதிக தற்கொலைகள் நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் எண்ணிக்கையைப் போலவே 20 மடங்கு அதிகமானோர் தற்கொலைக்கு முயல்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தால், சுமார் 20 பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.

குடும்பப் பிரச்னை, மன உளைச்சல் என பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ளும் முறை அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

தற்கொலை செய்து கொள்வதில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதைத் தொடர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்வதும், தீக்குளிப்பதும் அதிகம் உள்ளன.

பணக்கார நாடுகளில் நடக்கும் தற்கொலைச் சம்பவங்களுக்கு பெரும்பாலும் மனநல பாதிப்பு அல்லது போதைப் பொருள் பழக்கம் போன்றவை காரணங்களாக அமைகின்றன. அதாவது அந்த நொடியில் ஏற்படும் மன உந்துதலால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, மக்களின் மன நலனைக் காக்க நடவடிக்கை எடுப்பது போன்றவை தற்கொலைகளைத் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com