சிரியாவின் டெயிர் அல்-ஸூர் மாகாணத்தில் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினருக்கு எதிராக இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தி, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த பல பகுதிகளை குர்துப் படையினர் கைப்பற்றியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீசிய மணல் புயலை சாதகமாகப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
அந்தப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 53 பயங்கரவாதிகளும், 37 குர்து படையினரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.