ஈரான் நாட்டில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் 20 பேர் பலியாகினர்.
ஈரானின் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஷனாலியில் பேருந்து ஒன்றில் இஸ்லாமிய புரட்சிகர படைப்பிரிவு வீரர்கள் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 20 வீரர்கள் பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு நடைபெற்ற பகுதி, பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. அது ஓபியம் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் நடமாட்டம் அதிகமுள்ள இடமாகும்.
அங்கு ஈரானிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், பலுசிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கமாகும். இதனால் தற்கொலைப்படை தாக்குதலை பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு: சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்

தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்புடன் தொடரும்: அமைச்சா் வி. காந்திராஜ்

நான் மோடியின் மிகப் பெரிய ரசிகன்! அமெரிக்க அதிபா் டிரம்ப்
கடல் சீற்றத்தால் இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவா் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


