அசாஞ்சே கைதுக்கு பிறகு ஈக்வடார் வலைதளங்களில் 4 கோடி ஊடுருவல்கள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை தாங்கள் பிரிட்டன் போலீஸாரிடம் ஒப்படைத்த பிறகு, தங்கள் நாட்டு வலைதளங்களில் 4 கோடி ஊடுருவல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக ஈக்வடார் தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை தாங்கள் பிரிட்டன் போலீஸாரிடம் ஒப்படைத்த பிறகு, தங்கள் நாட்டு வலைதளங்களில் 4 கோடி ஊடுருவல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக ஈக்வடார் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த நாட்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பேட்ரிசியோ ரியல் கூறியதாவது:
 ஜூலியன் அசாஞ்சேவுக்கு நாங்கள் வழங்கியிருந்த அடைக்கலத்தை விலக்கிக் கொண்டதால் அவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எங்களது வலைதளங்களில் 4 கோடி முறை ஊடுருவல் தாக்குதல் நடைபெற்றது.
 கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஊருவல், பெரும்பாலும் அமெரிக்கா, பிரேசில், ஹாலந்து, ஜெர்மனி, ருமேனியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து நடைபெற்றுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com