சிரியா: ஐ.எஸ். தாக்குதலில் 43 அரசுப் படை வீரர்கள் பலி

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 43 அரசு ஆதரவுப் படையினர் உயிரிழந்தனர்.

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 43 அரசு ஆதரவுப் படையினர் உயிரிழந்தனர்.
ஐ.எஸ். பயங்கரவாத சாம்ராஜ்யம் முழுவதும் ஒழிக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, அந்த பயங்கரவாதிகள் நடத்திய மிக மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:
ஹாம்ஸ் மாகாணத்தின் கிழக்கே உள்ள பாலைவனப் பகுதியில், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே கடந்த 48 மணி நேரமாக நடைபெற்ற சண்டையில் 35 அரசுப் படையினர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் சிரியா ராணுவத்தினரும், அல்-அஸாதுக்கு ஆதரவாகச் சண்டையிடும் ஆயுதக் குழுவினரும் அடங்குவர்.
டெயிர் எஸ்ஸார் மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில், மேலும் 8 அரசு ஆதரவுப் படையினர் உயிரிழந்தனர். யூப்ரடீஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து கடைசியாகக் மீட்கப்பட்ட பாலைவன கிராமமான மாயாதீனில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. சிரியா மற்றும் இராக்கில் ஐ.எஸ். சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்திருந்தாலும், அவர்கள் அதிபயங்கரத் தாக்குதல் நடத்துவதற்கான அச்சுறுத்தல் நீங்கவில்லை என்று அமெரிக்கக் கூட்டுப் படைத் தலைமை ஏற்கெனவே எச்சரித்திருந்தது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 43 வீரர்கள் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com