சூடான்: ராணுவ தலைமையகம் முன் மக்கள் போராட்டம்

சூடானில் ராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சி அதிகாரத்தை அரசியல் தலைமையிடம் ஒப்படைக்க கோரி ஆயிரக்கணக்கானோர் ராணுவ கவுன்சில்
சூடான் தலைநகர் கர்தோமில் ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சூடான் தலைநகர் கர்தோமில் ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.


சூடானில் ராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சி அதிகாரத்தை அரசியல் தலைமையிடம் ஒப்படைக்க கோரி ஆயிரக்கணக்கானோர் ராணுவ கவுன்சில் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சூடான் அதிபராக நீண்டகாலம் பதவி வகித்து வந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக, இனப் படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் சர்வதேச நீதிமன்றம் 2 கைது வாரண்டுகளை பிறப்பித்தது. இதையடுத்து, அவருக்கு எதிராக அந்தநாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்ததன் விளைவாக, பஷீரை பதவி நீக்கம் செய்துவிட்டு, ஆட்சி பொறுப்பை ராணுவ கவுன்சில் ஏற்றது. இதைத் தொடர்ந்து, சூடான் அதிபராக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அவத் இபின் அல்ப்  பதவியேற்றார். 
ஆனால் ராணுவ தளபதி அதிபரானதை விரும்பாத மக்கள், அவருக்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அவத் இபின் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 
புதிய அதிபராக, ஜெனரல் அப்தல் பட்டா அல் -பர்கான் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன், சூடானில் இரவோடு இரவாக, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அரசியல்வாதிகளை கைது செய்து சிறையில் அடைத்தார். இதற்கு, உலக நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதையடுத்து, இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற்றதுடன், அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் ராணுவ ஆட்சியாளர் பர்கான் உத்தரவிட்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. 
மேலும், அந்த நாட்டில் விரைவில் மக்களாட்சி மலர வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் நல்லெண்ண நடவடிக்கையாக கர்தோம் நகருக்கு தூதரையும் அனுப்பி வைக்க முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மோர்கன் அர்டாகஸ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ராணுவ ஆட்சியாளர்கள் மோதல்களை தவிர்ப்பதுடன் சூடான் மக்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும். சூடான் மக்களை பொருத்தவரையில் ராணுவத்தினர் அரசியல் தலைமையிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு இது சரியான தருணம் என்பதில் தெளிவாக உள்ளனர் என்றார் அவர்.
இந்த நிலையில், கர்தோமில் உள்ள ராணுவ தலைமையகம் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி அதிகாரத்தை மக்களாட்சி மன்றத்திடம் ஒப்படைக்க கோரி வியாழக்கிழமை இரவு முழுவதும் முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து போரட்டத்தில் கலந்து கொண்ட வாலி ஆல்டின் என்பவர் கூறும்போது:
அதிபர் பர்கான் தனது ஆட்சி அதிகாரத்தை அரசியல் தலைமையிடம் ஒப்படைக்கும் வரையில் இந்த இடத்தை விட்டு போகப்போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com