இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடித்ததில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அப்போது கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், கிங்ஸ்பெரி தேவாலயம், பட்டிகலோயாவில் உள்ள தேவாலயம், ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் ஆகிய ஹோட்டகளில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த 80க்கும் மேற்பட்டோர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் இலங்கை அதிபர் சிறிசேன பார்வையிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.