மணிலா: பிலின்பைன்ஸில் இன்று கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், பிலின்பைன்ஸில் அந்நாட்டு நேரப்படி மாலை 5.11 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆகப் பதிவானது.
கடும் நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. மக்கள் அச்சத்தில் கட்டடங்களை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தின் மையம் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.