ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் கரைக்கு 50 கி.மீ. தொலைவில் ஏற்பட்டிருந்தாலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், கடந்த 2011-ஆம் ஆண்டில் அணு உலை விபத்து ஏற்பட்ட ஃபுகுஷிமா உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டன. எனினும், சேதங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.