திம்பு: தனது இரண்டு நாள் பூடான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஞாயிறன்று இந்தியா புறப்பட்டார்.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக வெள்ளியன்று பூடான் பயணம் மேற்கொண்டார். இருநாட்டு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் வலுப்படுத்துவது அவரது பயணத்தின் முக்கிய குறிக்கோளாக அமைந்திருந்தது.
ஞாயிறன்று நாடு திரும்புவதற்கு முன்பாக அவர் பூடான் ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றினார். அத்துடன் மறைந்த பூடான் மன்னர் மூன்றாம் துருக் யல்போ நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனது சிறப்பு விமானத்தில் மோடி நாடு திரும்பினார்.
இதுதொடர்பாக பூடானுக்கு நன்றி தெரிவித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ட்வீட் செய்திருந்தார்.