டிசம்பர் முதல் மற்றும் 2-ஆவது நாளில், சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் பிரதிநிதியும், இலங்கைக்கான சீனாவின் முன்னாள் தூதருமான ஊ ஜியாங் ஹாவ் இலங்கையில் பயணம் மேற்கொண்டு, புதிய அரசுத் தலைவராகப் பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவையும், புதிய தலைமை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள மஹிந்த ராஜபக்சேவையும் சந்தித்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான உறுதியான அரசியல் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, நடைமுறை ஒத்துழைப்பின் நிலையை உயர்த்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்