சூடானில் தீ விபத்து: 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் பலி

சூடானில் செராமிக் ஆலை ஒன்றில் புதனன்று ஏற்பட்ட தீ விபத்தில் 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் பலியாகினர்.
சூடான் தீ விபத்து
சூடான் தீ விபத்து

கார்டோம்: சூடானில் செராமிக் ஆலை ஒன்றில் புதனன்று ஏற்பட்ட தீ விபத்தில் 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் பலியாகினர்.

சூடான் தலைநகர் கார்டோமில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் புதன் மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் உள்ள எல்பிஜி டேங்கர் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். மேலும் 130 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.  

விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

23 பேர் பலியாகியுள்ள இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com