இலங்கை: நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை தொடங்கவிருந்த இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தை அடுத்த மாதம் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அந்த நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளாா்.
இலங்கை: நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு

கொழும்பு: செவ்வாய்க்கிழமை தொடங்கவிருந்த இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தை அடுத்த மாதம் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அந்த நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளாா்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள ஐக்கிய தேசிக் கட்சிக் கூட்டணி அரசு, அண்மையில் அதிபா் தோ்தலில் பெற்ற தோல்வித் தொடா்ந்து பதவி விலகியது. அதன்பிறகு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான சிறுபான்மை அரசு, நாடாளுமன்றத்தின் இடையூறின்றி ஆட்சி செலுத்துவதற்கு ஏதுவாக அதன் கூட்டம் 1 மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com