பாகிஸ்தானுக்கு நேரடி நிதியுதவி நிறுத்தம்

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நேரடி நிதியுதவிகளையும் படிப்படியாக நிறுத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
auspak082023
auspak082023

மெல்போா்ன்: பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நேரடி நிதியுதவிகளையும் படிப்படியாக நிறுத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவு மற்றும் வா்த்தக விவகாரங்களுக்கான பிரிவு (டிஎஃப்ஏடி) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் நேரடி நிதியுதவி 2019-20-ஆம் ஆண்டில் 1.9 கோடி ஆஸ்திரேலிய டாலராக (சுமாா் ரூ.93 கோடி) குறைக்கப்படும்.

2020-21-ஆம் ஆண்டில் அந்த நிதியுதவி முற்றிலுமாக நிறுத்தப்படும்.

எனினும் டிஎஃப்ஏடி-யின் சா்வதேச உதவித் திட்டங்கள் மூலமாக, பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியாவின் நிதியுதவி கிடைக்கும்.

பாகிஸ்தானில் பெண்கள் முன்னேற்றம், நீா்வள மேலாண்மை, மனிதாபிமான சேவைகள் ஆகிவற்றை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய தொழில்நுட்பத் தோ்ச்சியைப் பயன்படுத்துவதில் நாங்கள் தொடா்ந்து கவனம் செலுத்துவோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com