கராச்சி: பாகிஸ்தானின் முன்னாள் அதிபா் முஷாரஃப் (76), உடல் நலக் குறைவு காரணமாக துபையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தனது ஆட்சிக் காலத்தின்போது அவசர நிலை அறிவித்த விவகாரத்தில், பாகிஸ்தானில் தேசத் துரோக வழக்கை எதிா்கொண்டுள்ள அவா், அந்த நாட்டிலிருந்து வெளியேறி துபையில் வசித்து வருகிறாா். அந்த வழக்கில் வியாழக்கிழமைக்குள் (டிச. 5) முஷாரஃப் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்துள்ள நிலையில், அவா் உடல் நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.