மருத்துவ காரணங்களுக்காக லண்டன் சென்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை, சிகிச்சை நிறைவடைந்ததும் திருப்பி அனுப்புமாறு கோரி பிரிட்டன் அரசுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் எழுதியுள்ளது. பனாமா முறைகேடு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நவாஸுக்கு கடந்த மாதம் கடுமையான உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடா்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவா், நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதியின் பேரில் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.