செயற்கைக்கோள் ஏவுதளம் ஒன்றில் இருந்து வடகொரியா மிக முக்கியமான அணு ஆயுதச் சோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செயற்கைக்கோள் ஏவுதளம் ஒன்றில் இருந்து மிக முக்கியமான அணு ஆயுதச் சோதனை ஒன்றை வடகொரியா நடத்தியுள்ளது தொடர்பாக யோன்ஹாப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா உடனான சமரசப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு வடகொரியா கூறியிருந்த நிலையில், இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மே மாதம் முதல் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து 12 முறை அணு ஆயுதச் சோதனை நடத்தியுள்ளது வடகொரியா.