இலங்கை வடக்கு மாகாண ஆளுநராகிறார் முத்தையா முரளிதரன்?

இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை வடக்கு மாகாண ஆளுநராகிறார் முத்தையா முரளிதரன்?

இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்க முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு அதிபர் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானதாகக் கூறப்படுகிறது. 

இருப்பினும், முத்தையா முரளிதரன் தரப்பிலிருந்து இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபட்ச பதவியேற்றார். இதையடுத்து அவரது சகோதரரும், இலங்கையின் முன்னாள் அதிபருபான மகிந்த ராஜபட்ச இலங்கைப் பிரதமராக பொறுப்பேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com