38 பேருடன் சென்ற சிலி ராணுவ விமானம் மாயம்

38 பேருடன் சென்ற சிலி ராணுவ விமானம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
38 பேருடன் சென்ற சிலி ராணுவ விமானம் மாயம்

38 பேருடன் சென்ற சிலி ராணுவ விமானம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிலியின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு 38 பேருடன் ஏசி-130 ஹெர்குலஸ் வகையைச்சேர்ந்த விமானம் நேற்று புறப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணியில் சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மாயமான விமானத்தில் 21 பயணிகள், 17 பணியாளர்கள் என மொத்தம் 38 பேர் பயணம் செய்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com