போலி வங்கிக் கணக்கு மோசடி வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு, மருத்துவ காரணங்களுக்காக அந்த நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தனக்கு சிறைக்குள் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்கவேண்டும் என்று ஜா்தாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.
ஏற்கெனவே, ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கப்பட்டு, அவா் சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளாா். இந்த நிலையில், ஜா்தாரிக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.