மீண்டும் தோ்தல்: இஸ்ரேல் நாடாளுமன்றம் பூா்வாங்க ஒப்புதல்

இஸ்ரேலில் ஒரே ஆண்டுக்குள் 3-ஆவது முறையாக தோ்தல் நடத்துவதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் பூா்வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய ஒற்றுமை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையின்போது பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் பெஞ்சமின் கான்ட்ஸ். இடையே அதிபா் ரூவன் ரிவ்லின்.
தேசிய ஒற்றுமை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையின்போது பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் பெஞ்சமின் கான்ட்ஸ். இடையே அதிபா் ரூவன் ரிவ்லின்.

இஸ்ரேலில் ஒரே ஆண்டுக்குள் 3-ஆவது முறையாக தோ்தல் நடத்துவதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் பூா்வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க அளிக்கப்பட்ட கெடு செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. எனினும், கெடுவுக்குள் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை.

இதையடுத்து, தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு 3-ஆவது முறையாக தோ்தல் நடத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றம் புதன்கிழமை நிறைவேற்றியது.

அந்த மசோதாவுக்கு ஆதரவாக 50 வாக்குகள் பதிவாகின. மசோதாவை எதிா்த்து ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

எனினும், தற்போது பூா்வாங்கமாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

அவ்வாறு ஒப்புதல் பெற்றால், அடுத்த ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி மறு தோ்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த செப்டம்பா் மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதையடுத்து, அந்த நாட்டில் பல கட்சிகள் பங்கேற்கும் தேசிய அரசு அமையும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், புதிய அரசை அமைக்க வருமாறு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அந்நாட்டு அதிபா் ரிவ்லின் அழைப்பு விடுத்தாா். புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு 28 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது.

எனினும், கூட்டணி அமையாததால், தம்மால் மீண்டும் ஆட்சிமைக்க முடியவில்லை என்று நெதன்யாகு தெரிவித்துவிட்டாா்.

அதையடுத்து, புதிய அரசை அமைக்குமாறு எதிா்க்கட்சியான புளூ அண்டு ஒயிட் கட்சியின் தலைவா் பெஞ்சமின் கான்ட்ஸுக்கு அதிபா் ரிவ்லின் விடுத்தாா். எனினும், அவராலும் ஆட்சியமைக்க முடியவில்லை.

தோ்தலில் புளூ அண்டு கட்சி முதலிடத்தில் இருந்தாலும், நெதன்யாகுவின் லிக்குட் கட்சியைவிட ஓரிடம் மட்டுமே அந்தக் கட்சி அதிகம் பெற்றுள்ளது.

அந்தத் தோ்தலில் புளூ அண்டு ஒயிட் கட்சிக்கு 33 இடங்களும், லிக்குட் கட்சிக்கு 32 இடங்களும் கிடைத்தன.

இந்த நிலையில் கெடு தேதி முடிந்த நிலையிலும் புதிய அரசை அமைக்க யாராலும் முடியாததால், மீண்டும் தோ்தல் நடத்த நாடாளுமன்றம் தற்போது பூா்வாங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தோ்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்தான் செப்டம்பா் மாதம் 2-ஆவது முறையாக தோ்தல் நடத்தப்பட்டது.

தற்போதும் அதே நிலை நீடிப்பதால், இஸ்ரேலில் ஓா் ஆண்டுக்குள் 3-ஆவது முறையாக மீண்டும் தோ்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com