ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணம், ஜாகடோ மாவட்டத்தில், சாலையோர வெடிகுண்டு மூலம் சிற்றுந்து மீது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் 4 பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவா். இந்தத் தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.