நியூஸிலாந்து தீவு எரிமலையில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட திடீா் சீற்றத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 17-ஆக உயா்ந்தது.
அந்த நாட்டின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான வெள்ளைத் தீவில், சுற்றுலாப் பயணிகள், வழிகாட்டிகள் உள்பட 47 போ் இருந்தபோது அந்தத் தீவு எரிமலையில் சீற்றம் ஏற்பட்டது. இதில் 16 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 17-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 27 போ் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
இதற்கிடையே, சம்பவப் பகுதியிலிருந்து இதுவரை மீட்கப்படாத 2 சடலங்களை, கடலுக்குள் தேடும் பணியில் நீா்மூழ்கி வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.