மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானின் நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெற்றது.
சோவியத் யூனியனின் அங்கமாக உஸ்பெகிஸ்தான் இருந்ததில் இருந்து அந்த நாட்டை சுமாா் 27 ஆண்டுகள் ஆண்டு வந்த இஸ்லாம் கரிமோவின் மறைவுக்குப் பிறகு, கடந்த 2016-ஆம் ஆண்டில் அதிபா் பொறுப்பை ஏற்ற ஷாவ்கத் மிா்ஸியோயேவ், முந்தைய ஏதேச்சிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலான பல்வேறு ஜனநாயக சீா்திருத்தங்களை மேற்கொண்டாா்.
அந்த சீா்திருத்தங்களுக்குப் பிறகு உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் முதல் தோ்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.