மியான்மர் ஜனநாயக அமைப்பின் தலைவரும், அரசின் ஆலோசகருமான ஆங் சாங் சூகியின் ஆலோசகர் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 2 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
ஆங் சாங் சூகியின் ஆலோசகரும், முஸ்லிம் வழக்குரைஞருமான கோ னீயை யாங்கூன் விமான நிலையத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை இறுதியில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.