பிரிட்டன் இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
பிரிட்டன் இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி வியாழக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனம் குவிந்து வருகிறது.

மேலும், இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. அதுபோன்று பயங்கரவாதத்தின் பிறப்பிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாகச் சாடி வருகின்றன.

இந்நிலையில், பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்கள் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக லண்டனில் ஒன்றுதிரண்டு பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com