உலகம்
"பொதுமக்கள் 1,000 பேரை சிறைபிடித்துள்ளது ஐ.எஸ்.'
ஐ.எஸ். பயங்கரவாதிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களை சிறைபிடித்து வைத்துள்ளதாக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்துப் படை தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களை சிறைபிடித்து வைத்துள்ளதாக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்துப் படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தப் படையின் செய்தித் தொடர்பாளர் முஸ்தபா பாலி கூறியதாவது:
கிழக்கு சிரியாவில் ஐ.எஸ். ஆதிக்கத்துக்கு உள்பட்ட பேக்ஹவுஸ் கிராமத்தில் உள்ள சிறிய பகுதிக்குள் பொதுமக்கள் 1,000-க்கும் மேற்பட்டோரை அவர்கள் எங்கும் வெளியேற விடாமல் சிறைப்பிடித்து வைத்துள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
துரதிருஷ்டவசமாக, அந்தப் பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் மூடப்பட்டுள்ளன.
ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் பலர் அந்த சிறிய கிராமத்தில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றார் அவர்.