புல்வாமா தாக்குதலை கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம்

புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் புதன்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புல்வாமா தாக்குதலை கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம்

புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் புதன்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை (பிப்.14) தாக்குதல் நடத்தினான். வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்து, சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி வெடிக்க செய்தான். 

இதில் பேருந்தில் சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்நிலையில், நியூஸிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தனர். அதில், பிப்ரவரி 14-ஆம் தேதி இந்தியாவின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பது என்றிருந்தது.

இதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வீரர்கள் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது. இந்த மிகப்பெரிய இழப்புக்கு இந்திய அரசுக்கு நியூஸிலாந்து அரசு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது என்று நியூஸிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com