பெரு: தென் அமெரிக்க நாடான பெருவின் எல்லைப் பகுதியில் உள்ள ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவின் எல்லைப் பகுதியில் உள்ள ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது இந்திய நேரப்படி 3.47 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.
ஈக்வடாரின் கிழக்கு பகுதியான அமேசோன் பகுதி நிலநடுக்க மையமாக இருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேத விபரங்கள் குறித்து எதுவும் தகவல் வெளியாகவில்லை.