பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் 47 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாகவும்., ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.