அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போலீசார் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் பீகன்பார்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் 5 போலீசார் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.