பிலிப்பின்ஸ்:ஐ.எஸ். பிணைக் கைதி சுட்டுக் கொலை

பிலிப்பின்ஸில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) ஆதரவு பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்ட நெதர்லாந்து நாட்டவர், பயங்கரவாதிகளால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிலிப்பின்ஸ்:ஐ.எஸ். பிணைக் கைதி சுட்டுக் கொலை


பிலிப்பின்ஸில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) ஆதரவு பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்ட நெதர்லாந்து நாட்டவர், பயங்கரவாதிகளால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ அதிகாரி திவினோ பபாயோ கூறியதாவது:
ஐ.எஸ். ஆதரவு அமைப்பான அபு சய்யஃப் பயங்கரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பறவை ஆர்வலர் எவோல்ட் ஹார்ன் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது, ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
அப்போது, எவோல்ட் ஹார்ன் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
அதனைக் கண்ட பயங்கரவாதிகள், அவரை சுட்டுக் கொன்றனர்.
அவரது உடலை ராணுவத்தினர் மீட்டுள்ளனர் என்றார் அவர்.
ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவருடனும், பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்தவருடனும் எவோல்ட் ஹார்ன் கடந்த 2012-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். எனினும், கடத்தப்பட்ட உடனேயே ஸ்விட்சர்லாந்து நாட்டவரும், பிலிப்பின்ஸ் நாட்டவரும் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பினர். எவோல்ட் ஹார்ன் மட்டும் அவர்களிடம் தொடர்ந்து பிணைக் கைதியாக இருந்து வந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com