தன் மீதான தேசத் துரோக வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் தாக்கல் செய்திருந்த மனுவை அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது. அந்த வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராக ஏற்கெனவே முஷாரஃப் பல முறை தவறியதால் அவரது மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.