வெனிசூலாவிலிருந்து நெதர்லாந்துக்குச் சொந்தமான குராகாவ் தீவை நோக்கி சுமார் 30 அகதிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்ட படகு, நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அகதிகள் யாரும் இதுவரை உறவினர்களைத் தொடர்பு கொள்ளாததால் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.