நாடுகடத்தல் சட்டத்துக்கு எதிர்ப்பு: ஹாங்காங்கில் மீண்டும் பிரம்மாண்ட பேரணி

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
நாடுகடத்தல் சட்டத்துக்கு எதிர்ப்பு: ஹாங்காங்கில் மீண்டும் பிரம்மாண்ட பேரணி

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
அந்த மசோதாவை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளை நிறுத்திவைக்கப்பதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ள நிலையிலும், இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
இந்த பிரம்மாண்டமான பேரணியில், புதிய நாடுகடத்தல் சட்ட மசோதாவை வாபஸ் பெறவும், ஹாங்காங் அரசின் தலைவர் கேரீ லாம் பதவி விலகவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com