ஜப்பான் நாட்டின் வடமேற்கு பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இதையடுத்து, சுமார் ஒரு அடி வரை கடல் அலை எழும்பும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து, அந்த பகுதிகளில் புல்லட் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 200 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் ஒசாகா பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 350 பேர் வரை காயமடைந்தனர். 2011, மார்ச் 11-ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோல் 9.0 ஆக பதிவானது. இதன் விளைவாக சுனாமி ஏற்பட்டு, அது மிகப் பெரிய சேதத்தை உண்டாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.