நியூஸிலாந்திலுள்ள இரு மசூதிகளில் பிரென்டன் டாரன்ட் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தி 51 பேரை படுகொலை செய்த விடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிலிப்ஸ் ஆர்ப்ஸ் (44) என்பவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 21 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது. நியூஸிலாந்து சட்டப்படி தடை செய்யப்பட்ட விடியோவை பகிர்ந்தால் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.