இலங்கையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கத்தைக் கடத்த முயன்றதாக 6 இந்தியர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர்.
கொழும்பு விமான நிலையத்தில் அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, தங்கக் கட்டிகளை மறைத்து கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 36 வயதிலிருந்து 53 வயதுக்குள் இருப்பார்கள். சென்னைக்கு தங்கக் கட்டிகளை கடத்திச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.