உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒரே நிறுவனத்தின் முக்கிய செயலிகளான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை முடங்கின.
ஒரே நிறுவனத்தின் முக்கிய செயலிகளான இந்தசெயலிகளைப் பயன்படுத்தி வந்தோர் நேற்று நள்ளிரவு முதல் கடும் சிக்கலை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனை சரி செய்யும் பணியில் தொழில்நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக பிரச்னை சரி செய்யப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. பிறகு மெல்ல செயலிகளின் பயன்பாடு மீண்டதாகவும், எனினும் செய்திகளை அனுப்புவது பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
சுமார் 12 மணி நேரத்துக்கு முன்பு, பேஸ்புக் நிறுவனம் சார்பில் இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இது எந்த சைபர் தாக்குதலும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.