நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே உள்ள மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி அருகே மர்மநபர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மர்ம நபர்கள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்திருக்கலாம், காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடந்துகொண்டிருந்தபோது, அந்த பகுதியை விரைந்து வந்த போலீஸார் சுற்றி வளைத்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் உள்ளூர் செய்திகள் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.