பாக். தேசிய தினத்துக்கு இந்திய பிரதமர் மோடியின் வாழ்த்து வரவேற்கத்தக்கது: இம்ரான் கான்

பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாக். தேசிய தினத்துக்கு இந்திய பிரதமர் மோடியின் வாழ்த்து வரவேற்கத்தக்கது: இம்ரான் கான்

பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். துணை கண்டப்பகுதியில் ஜனநாயக, அமைதியான, முற்போக்கான மற்றும் வளமான பகுதி உருவாக மக்கள் செயல்பட வேண்டிய நேரமிது. வன்முறையும், பயங்கரவாதமும் இல்லாத சூழ்நிலை ஏற்பட வேண்டும்.

பாக். தேசிய தினத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தி வரவேற்கத்தக்கது. இருநாடுகளுக்கு இடையிலான அனைத்து பிரச்னைகளும், குறிப்பாக காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவற்றை பேசித் தீர்க்க இதுவே சரியான தருணம். இருநாட்டு மக்களின் உறவு அமைதியாகவும், செழிப்பாகவும் அமைய இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com