ஆப்கன்: இரட்டை குண்டுவெடிப்பில் 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டை குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டை குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஹெல்மண்ட் மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் ஒமர் ஸ்வாக் கூறியதாவது:
ஹெல்மண்ட் மாகாண தலைநகர் லஷ்கர் ஹாக்கில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில், பொதுமக்கள், அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அந்த கூட்டத்தில் ஊடுருவிய சில பயங்கரவாதிகள் சிலர் இரண்டு இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதலை நிகழ்த்தினர் என்றார் அவர்.
இருப்பினும், இதில், சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக ஒமர் தெரிவிக்கவில்லை. 
ஆனால், இந்த இரட்டை குண்டுவெடிப்பில்  3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இது தலிபான்களின் சதி வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், இந்த மாகாணத்தில் அதிகாரிகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்களே அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com