பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான காவலரே திருடன் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
ரஃபேல் விவாகரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பாதுகாவலரே திருடன் (சௌக்கிதார் சோர் ஹே) என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தில் உச்ச நீதிமன்றத்தை தெரியாமல் இணைத்துவிட்டேன். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சுமார் 3 பக்கங்கள் அடங்கிய பதில் மனுவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்திருந்தார்.
எனவே இதுதொடர்பாக பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தாக்கல் செய்துள்ள அனைத்து அவமதிப்பு வழக்குகளையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தனது மனுவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.