நவீன யுகத்தில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மனிதர்கள் மரங்களின் வேர்களை சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் இந்த முறையை 1,20,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் கடைப்பிடித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
தென்னாப்ரிக்காவின் கிளாஸிஸ் நதியோரம் அமைந்திருக்கும் குகைகளில், மனிதன் சமைத்து சாப்பிட்டு போட்ட மர வேர்களின் மிச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன் மூலம், மரத்தின் வேர்களால் சேமிக்கப்படும் ஸ்டார்ச்களை நவீன கால மனிதர்கள் சமைத்து சாப்பிடுவதைப் போலவே, 1,20,000 ஆண்டுகளுக்கு முன்பும் சமைத்து சாப்பிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த 65 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரை பழக்கத்தில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.