பிரேசில் மதுபான விடுதியில் மர்மநபர்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
பெலம் நகரில் அமைந்துள்ள மதுபான விடுதியில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, மூன்று கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஏழு ஆண்கள், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஆறு பெண்கள், ஐந்து ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஆறுபேர் தப்பியோடிவிட்டனர். ஒருவர் மட்டும் காயங்களுடன் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அவரிடம் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.