இலங்கையில் கடந்த மாதம் நடைபெற்ற ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக மேலும் 5 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடைய ஐந்து பேர் அனுராதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். நாட்டில் அவசர நிலையை நாடாளுமன்றம் நீட்டித்த நிலையில், அதன் மூலம் கிடைத்த சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த ஐவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அரசுப் பள்ளியிலும், இருவர் அரபி பள்ளியிலும் ஆசிரியர்களாகப் பணியாற்றவர்கள். ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் மதபோதனை செய்தனர் என்று
போலீஸார் தெரிவித்தனர்.