
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளுக்காக நிதி வசூலித்த 5 பேரை அந்த நாட்டுக் காவல் துறையினர் கைது செய்தனர்.
பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த அந்த 5 பேரும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டப்படுவதைத் தடுப்பதற்கு பாகிஸ்தான் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கண்காணித்து வரும் எஃப்ஏடிஎஃப் அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் குற்றம் சாட்டியது. இந்த நிலையில், பயங்கரவாத நிதியளிப்பு விவகாரத்தில் பாகிஸ்தான் போலீஸார் 5 பேரைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.