ஆப்கானிஸ்தானில் அண்மையில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து அந்த நாட்டு பேரிடர் மேலாண்மை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் தலைநகர் காபூல் உள்பட நாட்டின் 34 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான பகுதிகள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
மழை, வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர்; 220-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுமார் 500 பேர் மீட்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்