'புதிய' இந்திய அரசுடன் 'பேச்சுவார்த்தை' நடத்த தயார்: பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்

புதிதாக அமைந்துள்ள இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். 
'புதிய' இந்திய அரசுடன் 'பேச்சுவார்த்தை' நடத்த தயார்: பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்

புதிதாக அமைந்துள்ள இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹமுத் குரேஷி தெரிவித்தார். இதுதொடர்பாக பாகிஸ்தானின் முதல்தான் நகரில் சனிக்கிழமை நடந்த இஃப்தார் விருந்தின் போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசுடன், இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அரசு தயாராக உள்ளது. எனவே இரு நாடுகளும் இணைந்து அமர்ந்து பேசி அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றார்.

முன்னதாக, 17-ஆவது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முந்தைய தினம் ஷாங்காய் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்-ஐ சந்தித்த பாக். வெளியுறவத்துறை அமைச்சர் குரேஷி, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் சுமூகமாக நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com